| "கடவுளைப் பற்றிய எந்தக் கருத்தும் உங்களுக்கு இல்லாதபோது, நீங்கள் எப்படி கடவுள் இல்லை என்று மறுக்கவோ அல்லது கடவுள் இருக்கிறார் என்று ஏற்கவோ முடியும்? முட்டாளாகவே இருங்கள், அவ்வளவுதான். அதுதான் கஷ்டம். "கடவுள் பற்றிய கருத்து என்ன?" என்று ஒட்டுமொத்த உலகத்திடமும் கேட்கும்போது, அவர்களால் பதிலளிக்க முடியாது. ஆனாலும், கடவுள் இல்லை என்று சொல்வார்கள். இதுதான் உலகம் முழுவதும் நடந்து வரும் முட்டாள்தனம். உண்மையில் அவர்கள் கடவுளைப் பற்றிக் கவலைப்படவில்லை. தங்களின் பொருள் வசதிகளுக்காக மட்டுமே கடவுள் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்: "ஓ கடவுளே, எங்களுக்கு தினசரி உணவைத் தாருங்கள்." அவ்வளவுதான். "நீங்கள் உணவை அளித்தால், நான் உங்களை ஏற்றுக் கொள்கிறேன். இல்லையெனில், நான் உங்களை நிராகரிக்கிறேன்.""
|